ஞாயிறு, 24 ஜூலை, 2022

குருகுல மக்கள் இயக்கம் செயல்பாட்டு வரைவு..

வாழ்க தமிழ்,

மலையரசி அங்காளி துணை,

வளர்க தமிழர் ஒற்றுமை..

"குருகுல மக்கள் இயக்கம் 

 உறுப்பினர் சேர்க்கை படிவம்..

&

செயல்பாடு வரைவு விளக்கம்_Part_1;

1.ஒன்றிய தலைநகரில் தமிழர் பொதுமறை படைத்த ஐயன் திருவள்ளுவர் வைகாசி அனுஷம் திருநாள் கொண்டாடுவது,, 

++

2.சிவாலயம் காக்க உயிர் நீத்தவரும், "ஜம்புத்தீவு பிரகடனம்" எனப்படும் இந்தியாவின் முதல் சுதந்திர பிரகடனத்தை ஜூன்_16 திருச்சியில் எழுத்தால் தெரிவித்த முதல் இந்திய விடுதலை வீரரும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு(379பேர்) முன்னரே திருப்பத்தூர் படுகொலை எனப்படும் நிகழ்வில் 500க்கும் மேலான அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் இன்னுயிர் நீத்த சுதந்திர மாவீரர்களுமான "Guru_Dinesty_King(மாளவம் எனப்படும் காளையார்கோவில்_சிவகங்கை)"
(Descendant of Upricharavasu Family)
The First Freedom decleration King of India 

"மாமன்னர் மருதுபாண்டியர்கள்" அரசுவிழா & குருபூஜையை

(October 24 & 27 ) இயக்கம் சார்பாக ஒன்றிய தலைநகர்களில் அனுசரிப்பது...

2;1 இந்திய சுதந்திர வரலாற்றில் தனிச்சிறப்புடைய ஜம்புத்தீவு பிரகடனம்(1801) வெளியிடப்பட்ட திருச்சியில்,மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை ஜம்புத்தீப முழு பிரகடன விளக்கத்துடன் அமைக்க தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கும் முன்னெடுப்புகள்..

3.பாரத தேசத்தின் குருகுல அரசர்களின் மைத்துனர் யாதவன் கண்ணனின் வழித்தோன்றலும்,பாரத தேசத்தின் சுதந்திர வேட்கையின் முதல் உயிர்பலியான கட்டாலங்குளம் மாவீரரும்,விடுதலை வீரருமான,யதுகுலம் யாதவராயர் அழகுமுத்துக்கோன் வருடாந்திர அரசுவிழா_குருபூஜை(July_11) நிகழ்வை இயக்கம் சார்பாக அனுசரிப்பது..


++

3.1 ஆவணி மாத ரோகிணி நட்சத்திர நாளில் யதுகுலம் யாதவன் கண்ணனின் அவதார திருநாளை இயக்கம் சார்பாக கொண்டாடுவது,

++

4.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் என அடுத்தடுத்த 

நட்சத்திர நாளாக வரும் "குருகுல அரசர்" மெய்ப்பொருள் நாயனார் மற்றும் "யதுகுலம்" ஆனாய நாயனார் ஆகியோரின் சிவசமய நட்சத்திர குருபூஜை நாட்களில் ஒன்றிய அளவில் இந்துமதத்தை சேர்ந்த அனைத்து சமுதாய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறையான அழைப்பிதழ் வைத்து அழைத்து சிவசமய குடும்ப திருவிழாவாக சிவாலயங்களில் அல்லது திருமண மன்டபங்களில் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நட்சத்திர சிவசமயத் திருவிழா கொண்டாடுதல்..

இந்நாளில் ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் சமய கலாச்சார நிகழ்வுகளுடன் இயக்கத்தின் அனைத்து இந்து சமுதாய குடும்பமும் ஆண்மீக நட்புறவுடன் சங்கமிக்கும் வருடாந்திர சமய & சமுதாய ஒற்றுமை விழாவாக வருடந்தோரும் இவ்விருநாளை உறுவாக்குதல்..

4.1 வருடம்தோறும் கார்த்திகை உத்திரம் & ஹஸ்தம் நட்சத்திர நட்களில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரத்தை(பரமேஸ்வரர்_கோவில்) சென்றடைவதை போல முன்திட்டமிட்டு தோராயமாக 20 முதல் 25 நாட்களுக்கு முன்னர் வரும் அக்டோபர்(ஐப்பசி) 27 மருதுபாண்டியர் குருபூஜை நாளில் காளையார்கோவிலில் புறப்பட்டு தட்சின துவாராக மன்னார்குடியில் ராஜகோபாலர் தரிசனம் முடித்து திருக்கோவிலூர்,திருவண்ணாமலை
சித்தூர் வழியாக காளஹஸ்தி, ஸ்ரீசைலம்,ராமானுஜர் டெம்பில் ஹைதரபாத், காசி,திரிவேனி சங்கமம்,வட மதுரா, ஆயர்பாடி(கோகுலம்),ஆக்ரா 

வழியாக சென்று இறுதியாக குருஷேத்ரத்தில் நிறைவடையும் விதமாக ஆன்மீக யாத்திரையை உறுவாக்கி வருடம்தோறும் செல்லும் திட்டமிடலை வடிவமைத்தல்..

4.2 பாரத இந்துக்களின் புனித இடமான உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் "ஹஸ்தினாபூர்" கங்கை கரையில் 

Guru Dinesty King_மருதுபாண்டியர் 

மனிமன்டபமும் & மதுரா மாவட்டம் ஆயர்பாடி எனப்படும் கோகுலம் யமுனை நதிக்கரையில் yadu King அழகுமுத்துக்கோன் 

மனிமன்டபமும்,

ஹரியானா குருஷேத்ரத்தில் 

இவ்விருவரின் வரலாற்று நினைவகம் தேவை என்ற வேண்டுகோளை உத்திரபிரதேச மாநில அரசிற்கும் & மத்திய அரசிற்கும் கோரிக்கையாக கூறும் விதமான செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன் முதல் சுதந்திர பிரகடன பெருமைமிகு அடையாளங்கள் என இந்தியாவின் அனைத்து மொழி பாடத்திலும் சேர்த்திடவும் கோரிக்கைகளை முன்னெடுப்பது.. 

4.3 ஜம்புத்தீபகற்பத்தின்(இந்திய) 

பாராளுமன்றத்தில் 

மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுப்பது,

4.4 இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் மருதுபாண்டியர் & அழகுமுத்துகோன் சிலை வைக்க முன்னுதாரனமாக குருகுல மன்னர்களின் தலைநகர் ஹஸ்தினாபூரையும், யதுகுலத்தாரின் புணித இடம் மதுராவையும் தன்னகத்தே கொண்ட உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் முதற்கட்டமாக சிலை வைக்க வேண்டும் என அம்மாநில அரசு & எதிர்கட்சி தலைவர்களின் கவணத்திற்கு இதனை கோரிக்கையாக கொண்டு செல்லும் நிகழ்வுகளை செயல்படுத்துதல்..

+++

5.வாரணாசியில்(காசி) & தென்மதுரையில்

Capital of Induisam என்ற பெயரில் உலகமாதா மலைமகளின் தந்தை பெயரில் "இமவான் திருக்கோவில்" கட்டுவதற்கு 100 ஏக்கர் இடம் ஒதுக்க மத்திய அரசு & உத்திரபிரதேச அரசு,தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது, இது தொடர்பாக அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லும் விடயங்களை முன்னெடுத்தல்..

5.1சிவசமயத்தவர் அனைவரின் தாய்வழி பாட்டன் மலையரையன் எனப்படும் எயினர் தலைவன் இமவானுக்கு இந்துக்களின் புண்ணிய நகரம் உத்திரபிரதேச காசியிலும், கடம்பவனம் எனப்படும் மதுரையிலும்
16 தமிழ்சமுதாய பெயரிலான விழா மன்டபம்,
63 நாயனார் மனிமன்டபம்,
276 சிவாலய சுற்றுப்பிரகாரம், உலகின் பெரிய நந்தி சிலை, ஆகியவற்றுடன் உலகின் உயரமான பிரம்மான்ட இமவானின்  சிலையுடன் ஆயிரம் கோடி.ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள "இமவான் திருக்கோவிலும் நிர்வாக அறக்கட்டளையும்" உறுவாக்குதல் தொடர்பான முன்னெடுப்புகளை செய்தல் மற்றும் இதற்கான பொது விளம்பரங்களை செய்தல்,

5.2இக்கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தாய் மதம்(இந்து) திரும்ப விரும்பும் கிறிஸ்தவர்,இஸ்லாமியர் உட்பட எவரையும் சிவசமயத்தவர் அனைவரின் தாய்வழி பாட்டன் இமாவன்(பர்வதராஜகுலம்) குடும்பத்தவராக ஏற்று அவர்களின் தலைமையகமாக இக்கோவிலின் இவ்வறக்கட்டளையை அடையாளப்படுத்த வழிகாட்டுதல்..

5.3இமயம் முதல் குமரி வரையானவர்களில் தாய் மதம் திரும்புபவர்களை பிற்படுத்தப்பட்டோர்(OBC) வகைப்பாட்டில் இந்து "பர்வதராஜகுலம்" & "பர்வதராஜபுத்திரர்" என்ற பெயரில் 

BC கேட்டகிரியில் சாதிச்சான்று வாங்கிடவும், அரசு ரீதியான முறையில் என்னிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டையும் பெற வழிவகை செய்யும் முயற்சிகளை ஆராய்ந்து சட்டபூர்வ முன்னெடுப்புகளை செய்தல்..

+++

6.தை மாதம் மிருகசிரிசம் நட்சத்திர நாளில் பொத்தப்பி மலையன் வேட்டுவர் சமுதாய கண்ணப்ப நாயனார் குருபூஜையை கொண்டாடுதல்,
63 நாயனாரை போற்றுதல்,

6.1ஆடி மாதம்
மழவர் பெருமகன் "வல்வில் ஓரி"
அரசு விழாவிற்கு இயக்கம் சார்பாக மரியாதை செய்தல் ஆடி_18 சுவரொட்டி வாழ்த்து தெரிவித்தல்..

6.2கோடை மலையன் கடியநெடு வேட்டுவனுக்கு கொடைக்கானலிலும்,வல்வில் வேட்டுவன் நள்ளிக்கு ஊட்டியிலும் சிலை அமைத்து தரும் கோரிக்கைகளை பிரசுரித்து அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லுதல்...

+++

7.யதுகுலத்து கொடும்பாளூர் இருங்கோவேளின் சம்பந்திகளும்,தமிழில் முதல் மெய்கீர்த்தி கண்ட சோழநாட்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வருடாந்திர சதயவிழாவிற்கு(May_23) இயக்கம் சார்பாக மரியாதை செய்தல் வாழ்த்து சுவரொட்டி அச்சடித்தல்..

+++

8.செங்குந்தர் சமுதாய கொடிகாத்த குமரன்(ஜனவரி_11) வீரவணக்கம், 64வது நாயனார் கிருபானந்த வாரியார் ஐப்பசி ஆயில்யம் குருபூஜை, சிவமைந்தர்களான முருகன்,நவவீரர் அவதார நிகழ்வுகளை கொண்டாடுதல் சுவரொட்டி அச்சடித்து வாழ்த்து தெரிவித்தல்..

+++

9.தமிழ்நாடு பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனார்(நாடார்) நினைவுநாள் (October_13), 
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை(July_15) கொண்டாடுதல் சுவரொட்டி அச்சடித்தல்,

போர்பயிற்சி ஆசான் என சேக்கிழாரால் போற்றப்பட்ட
ஈழச்சான்றார் ஏனாதிநாத நாயனார் புரட்டாசி உத்திராடம் குருபூஜை நிகழ்வை கொண்டாடுதல் 63 நாயானாரை போற்றி சுவரொட்டி வாழ்த்து தெரிவித்தல்,

+++

10.ஏழிசை மோகனர் தியாகராஜ பாகவதர்(கம்மாளர்_விஸ்வகர்மா) 
மார்ச்_1 பிறந்தநாள் மற்றும் வருடாந்திர விஸ்வகர்மா ஜெயந்தி(September_17) நிகழ்வை இயக்கம் சார்பாக நடத்தி சுவரொட்டி அச்சடித்து வாழ்த்து தெரிவித்தல்..

+++

11.அறுபத்து மூவர் நாயனார்களுக்கான திருத்தொண்டர்தொகை படைத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார்(ஆதிசைவர்) ஆடிமாத சுவாதி நட்சத்திர குருபூஜை விழாவை செய்தல் சுவரொட்டி அச்சடித்தல், நாயனார் 63வரை போற்றுதல்..

+++

12.இசைத்தமிழ் அன்னை காரைக்கால் அம்மையார்(செட்டியார்) பங்குனி சுவாதி குருபூஜை கொண்டாடுதல்,நாயனார் 63வரை போற்றுதல்..

+++

13.சந்தத்தின் தந்தை எனப்படுபவரும்,சமணர்களை வென்று சைவத்தை நிலைநிருத்தியவருமான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்(பிராமணர்) வைகாசி மூல நட்சத்திர குருபூஜை கொண்டாடுதல், நாயனார் 63வரை போற்றுதல்..

+++

15.இயக்க உறுப்பினராக இந்துமதத்தவர் மட்டுமே இயலும் ஆனால் மதங்கள் கடந்த சமுதாய நல்லினக்கத்தை போற்றுவது நமது இயக்கம் என்பதால் தூத்துக்குடியின் மாநகர தந்தை ஐயா குரூஸ்பர்ணாந்து அவர்களுக்கு வருடாந்திர மரியாதை செய்தல், 

சங்க இலக்கியம் போற்றும் 
நெய்தல் மன்னன் "தென் பரதவனுக்கு" தூத்துகுடியிலும், நெய்தல் மன்னன் "பல்வேல் மத்திக்கு" பூம்புகாரிலும் சிலை வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்நாளில் வாழ்த்து சுவரொட்டியாக வேண்டுகோளுடன் அச்சடித்தல்,

         15;1சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுநாள் புகழ்வணக்கம் செய்தல்,

15;2அதிபத்த நாயனார்(மீனவர்) ஆவணி மகம் குருபூஜையை கொண்டாடுதல்..

15.3 இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய "கண்ணியமிகு" காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் & நினைவுநாள் நிகழ்வுகளை செய்து மதங்கள் கடந்த தமிழ் இன நட்பை போற்றுவது..

15.4 இளைஞர்களின் வழிகாட்டி ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு வருடாந்திர நினைவேந்தல் செய்தல்..

இதுவரையான நமது இயக்க செயல்பாடுகள் தாய்த்தமிழ்குடிகளில் 12 சமுதாயத்தவர்களுடன் தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்துகிறோம்...

+++

           "Other Tamil Hindus"

14.நேச நாயனார்(நெசவாளர்),

நந்தர் எனப்படும் திருநாளைபோவார் நாயனார்(புலையர்_பறையர்)

திருக்குறிப்பு தொண்ட நாயனார்(வண்ணார்),

திருநீலகண்ட நாயனார்(குயவர்),

ஏயர்கோன் கலிக்காம நாயனார் (ஹேஹேயர் மரபு),

மிழலை குறும்ப நாயனார்(குறும்பர்)

ஆகியோரது குருபூஜை நாட்களிலும்,

மற்றும் 63 நாயனார்களின் குருபூஜை வழிபாட்டையும் சிவாலயங்களில் செய்வதுடன் தொடர்புடைய சமுதாயத்தவர்களிடம் சிவசமய நாயனார் வருடாந்திர வழிபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..

14;1 இருபதாம் நூற்றான்டின் தமிழின பெருமை மிகு அரசியல் அடையாளமும்,ஆளுமைகளுமான 
இரெட்டமலை சீனிவாசன்(பறையர்) முத்துராமலிங்கத்தேவர்(மறவர்),
மூக்கையா தேவர்(கள்ளர்),
இராமசாமி படையாச்சியார்(வந்நியர்),

ஆகியோருக்கு வருடாந்திர மரியாதை நிகழ்வை இயக்கம் சார்பாக செய்தல்..

14.2 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதபடி தமிழகத்தில் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) என்ற பிரிவு உண்டு,இரண்டுகோடிக்கும் மேலானவர்கள் இவ்விட ஒதுக்கீட்டில் பலனடைகிறர்,இங்கனமான இட ஒதுக்கீட்டிற்காக போராடி இன்னுயிர் நீத்த 21மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய தலைநகரில் செய்தல்,,

14;3பூலித்தேவன் மடியில் குடல் சரிந்தபடி உயிர்துறந்த வெண்ணி காலாடியார், மற்றும் கப்பலோட்டிய பெருந்தமிழர் 
வ.உ சிதம்பரம் பிள்ளை ஆகியோருக்கு வருடாந்திர மரியாதை செய்தல்..

(other tamil hindus கேட்டகிரியில் 10க்கும் மேலான சமுதாயங்கள் தொடர்புடைய நிகழ்வுகள் உள்ளதை நினைவூட்டுகிறோம்)

+++

"Other Language Hindus"

15.தெலுங்கு வருடப்பிறப்பு & கேரள ஓணம் & மகாவீர் ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை இயக்கம் சார்பாக தெரிவிப்பது சுவரொட்டி அச்சடித்தல்,

16.இங்கனமான நிகழ்வுகளை இயக்கம் சார்பாக ஒன்றியம்தோரும் செய்ய ஒவ்வொரு ஒன்றியத்திலும் நமது இயக்கத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் தொடர்புடைய 12 சமுதாயங்களில் இருந்து ஆயிரத்தி இருநூறு பேரையும்(1200),

other "Tamil" Hindus கேட்டகிரியில்(10க்கும் மேலான சமுதாய) 500 பேரையும், 

மாற்றினத்து(மொழி) இந்துக்களில் இருந்து 300 பேரையும் என 

ஒன்றியம்தோரும் 2 ஆயிரம்பேரை(இந்துமத) இயக்க உறுப்பினராக்குவதை 

"குருகுல மக்கள் இயக்கம்" முதற்கட்ட இலக்காக கொள்கிறது..

இயக்க உறுப்பினர் அல்லாமல் நமது இயக்க வெப்சைட்டில் நமது ஆண்மீக & பொது செயல்பாடுகளின் ஆதரவாளர்களாக பதிவுசெய்துகொண்டு வழிகாட்டுனர்களாகவும் & நிதி மூலதன நன்கொடையாளராகவும் உதவிடும் அனைத்து மத & சமுதாய உறவுகளையும் இயக்கம் அனுமதித்து வரவேற்கிறது..

17.இயக்க அங்கத்தினர்கள் அனைவரின் ஆலோசனைகளை பரிசீலித்து அமைப்பு பெயரில் செய்யப்படும் எதற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டியது இயக்கத்தின் 
நிர்வாக கமிட்டி எனப்படும் மாநில  செயற்குழு ஆகும்,,

மாநில செயற்குழு உறுப்பினர்கள் 23பேர் ஆவர்,இவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்,,
இயக்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் அனைவரும் செயற்குழுவை தேர்வு செய்யும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவர்,,

(பின்குறிப்பு; இயக்கத்தின் மாநில செயற்குழு ஒப்புதல் இல்லாமல் உறுப்பினர்களோ அல்லது பொருப்பாளர்களோ தன்னிச்சையாக அமைப்பு பெயரில் செய்யும் எந்த தவறுக்கும் இயக்கம் பொருப்பேற்காது மேலும் அடிப்படை உறுப்பினர் & பொருப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர்)

17.1.செயல்பாட்டு வரைவுகளில் உள்ள எதையும் காலத்திற்கு தேவையானபடி திருத்தம் செய்ய,நீக்க,புதியவற்றை சேர்க்க மாநில செயற்குழுவிற்கு  அதிகாரமுள்ளது அவை வருடாந்திர பொதுக்குழுவில் முன்வைத்து ஆதரவு கோரி தீர்மானமாக நிறைவேற்றப்படும்..

18.இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஆரம்ப கல்வி உதவி,மேற்படிப்பு கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகியவற்றை இயக்கம் சார்பாக செய்யவும்,வழிகாட்டவும் ஒன்றியம் தோரும் நமது இயக்கத்தின் முதன்மை செயல்பாடு தொடர்புடைய 12 குடும்பங்கள் & Other Tamil Hindus கேட்டகிரி, & Other Language Hindus கேட்டகிரி ஆகியோரை வீடுதோரும் குடும்ப அட்டை என்னை அல்லது குடும்பத்தலைவரின் ஆதார் என்னை அடையாள அடிப்படையாக கொண்டு உறுப்பினர் சேர்க்கையின்போது கணக்கெடுத்து அதில் இயக்கத்தின் சார்பான உதவி பெற தகுதியானவர்களை தனிக்குறியீடுடன் நமது இயக்கத்திற்கான வெப்சைட்டில் பரமாரிப்பது,, 

19.இந்து மதத்தின் அனைத்து சமுதாயங்ளை சேர்ந்தவர்களுக்கும் தங்களது சமுதாய என்னிக்கை சார்ந்த அரசியல் விகிதாச்சார பிரதிநிதித்துவமுடனும் சகோதரத்துவமுடன்,வரலாற்று பாதுகாப்புடனும் வாழும் அவசியம் & அதன் சூழல் உறுவாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை, கருத்தரங்குகளை ஒன்றிய தலைநகர் அனைத்திலும் ஏற்படுத்துதல்...

20.அனைத்து நிகழ்வுகளிலும் மரம் நடுதலை முக்கியமான,கட்டாயமான நடைமுறையாகவும் பின்பற்றுவது..

20;1 செயல்வரைவில் இம்முதல் பாகத்தில் குறிப்பிட்டதை தவிற்த இந்திய அளவிலான இதர இந்துமத விழாக்களை & தேசியம் காத்த மாவீரர்கள் தின நிகழ்வை இயக்கம் சார்பாக கொண்டாடுவது தொடர்பாக மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு தீர்மானமாக நிறைவேற்றி ஆயுட்கால உறுப்பினர்களின் பெரும்பாண்மை வாக்கெடுப்பில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முடிவு செய்வது,,

20.2 இது அரசியல் இயக்கம் அல்ல, எனவே இவ்வியக்கத்தின் பெயரில் & இயக்க பொருப்பாளர் அடையாளங்களில் அரசியல் கருத்துகளை கூறுவதற்கும், 

ஒருவர் தனது சுயசார்பு விமர்சனங்களை எவர்மீதும் செய்யவும் அனுமதியில்லை, மேலும் எந்த கட்சியை சேர்ந்தவர்களும், எந்த சாதிசங்கத்தை சேர்ந்தவர்களும் இவ்வியக்கத்தின் செயல்வரைவை விரும்பி உறுப்பினராக, பங்களிப்பாளராக இயக்கம் அனுமதிக்கிறது.. 

(Example: ரோட்டரி சங்கம்,வணிகர் சங்கம்,விவசாயிகள் சங்கம், etc ..)

இவ்வாறாக
ஒன்றியம்தோரும் பெரும்பான்மையாகவும், 
வரலாற்று தொடர்புகளும் உள்ள 

1.இந்து மதத்தை சேர்ந்த நமது இயக்க பிரதான செய்பாடுகள் 
தொடர்புடைய( முதல் 12) தமிழ் குடும்பத்தவர்களிடத்திலும்,

2.Other Tamil Hindus கேட்டகிரியில் கூறப்படும் குடும்பங்களிடத்திலும்,

3.மாற்றினத்து(மொழி) இந்து மத உறவினர்களிடத்திலும்
(Other Language Hindus) 

ஆகிய ஒன்றியம்தோருமான முதன்மை பொதுக்குழு உறுப்பினர்களின் உறுப்பினர் சந்தா & உறுப்பினர் அல்லாத இதர ஆன்மீக ஆதரவாளர் நன்கொடை பங்களிப்புடனான இயக்க செயல்பாடுகளின் வழியாக, 

1.இந்து மத சமுதாயங்களுக்கிடையேயான ஆண்மீக சகோதரத்துவ நட்பையும், நெருக்கத்தையும்,ஒற்றுமையையும் இந்நிகழ்வுகளின் & விழாக்களின் வழியாக ஏற்படுத்தி, 

2.தேசியம் காத்த மாவீரர்களையும் & 

3.தேசத்தின் பெரும்பாண்மையான இந்து மதத்தையும்,

4.சிவசமய 63நாயனார்களின் வழிபாடு மற்றும் இந்து சமுதாயங்களுக்கிடையேயான 
சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவருடன் ஒருங்கினைந்தபடி காப்பதும், போற்றுவதும் இயக்கத்தின் முதன்மையான நான்ங்கு நோக்கமும் இலக்கும் என்பதை கூறி உறுப்பினராகவும், செயல்வீரர்களாக பொருப்புகளிலும்(பதவி),
செயலாற்ற விருப்பமுள்ளவர்களையும் & ஆதரவாளர்களாக மட்டும் பதிவுசெய்துகொண்டு உதவ விரும்புபவர்களையும் இயக்கம் வரவேற்கிறது..


+++

மாத உறுப்பினர் சந்தா ரூ.25,
             (Or)
ஒரு வருடமாக எனில் சந்தா ரூ.250,
             (Or)
10 வருட ஆயுள்கால சந்தா ரூ.2000,

(வருட சந்தா & ஆயுள்சந்தா உறுப்பினர்கள் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற வாக்களிக்கும் உரிமையுள்ள பொதுக்குழு உறுப்பினர் ஆவர்)

இயக்கத்திற்கான வங்கிகணக்கில் மட்டுமே உறுப்பினர் சந்தா & நன்கொடைகள் பெறப்பட்டு உறுப்பினர் அனைவரின் பார்வைக்கும் மாதாந்திர வரவு செலவுகள் இயக்கத்திற்கான வெப்சைட்டில் & முகநூல் பேஜில் & யூடியூப் சேனலில் பார்க்க வசதி உண்டு என தெரிவித்துக்கொள்கிறோம்..
வருடாந்திர பொதுக்குழுவிலும் இவை அனைத்தும் கலந்துகொள்ளுபவர்களிடத்தில் முன்வைக்கப்படும்,,,

(அனைத்து தினசரி நிர்வாக அலுவல் கோப்புகளையும் Indian Society Act 1975 ன்படி வேலை நாட்களில் காலை 9மனி முதல் மாலை 5 மனிக்குள் இயக்க அலுவலகத்தில் நேரில் பொதுக்குழு உறுப்பினர்கள் காண இயலும்)

செயல்பாட்டு வரைவு பாகம்_1 முற்றும்..

(மாநில அளவில் முதல்கட்ட பொதுக்குழு உறுப்பினர் என்னிக்கை 2ஆயிரம்பேர் இலக்கை அடைந்த பிறகு கூடிவிவாதித்து செயல்வரைவு பாகம்_2 வெளியிடப்படும்)

மேலதிக தகவல்களுக்கு காண்க; இயக்கத்தின் வெப்சைட்..

               "இங்கனம்"

குருகுல மக்கள் இயக்கம்,,,
தலைமை செயலகம்,
9500888335,9884350025

வாழ்க இந்துமதம்,
வளர்க இந்துக்களின் ஒற்றுமை..

************************************************************************************

         "உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்யும் விவர படிவம்"

இயக்கத்தின் செயல்பாடு வரைவாக குறிப்பிட்டப்பட்டுள்ளவை முழுவதையும் வாசித்து,புரிந்து,விரும்பி என்னை உறுப்பினராக இனைத்துக்கொள்கிறேன்...

1.பெயர்;

தந்தை பெயர்;

2.சமுதாயம்;

3.ரேசன்கார்டு என் அல்லது குடும்பத்தலைவர் ஆதார் என்;

4.போன் நம்பர்;

5.ஊராட்சி மன்றம் & வார்டு என்,

6.பேரூராட்சி&நகராட்சி&மாநகராட்சி & வார்டு என்;

7.மாவட்டம் & மாநிலம்;

8.குலதெய்வம்;

9.குடும்ப உறுப்பினர் என்னிக்கை;

ஆண்;  பெண்; Adults;

10; இயக்கத்தின் சார்பான உதவிபெற அரசு வருமான சான்றின்படி வறுமைகோட்டுக்கு கீழானவரா..?; 

11; இதர சிறப்பு விவரம்;

          "இப்படிக்கு"

(உறுப்பினர் கையொப்பம்)

******


++++++++

சில செயல்பாட்டு மாதிரி படங்கள் கீழே,,,

யாதவர் சமுதாயத்திற்கு வருடம்தோரும் நாட்காட்டி அச்சடித்தல்,

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சுவரொட்டி அச்சடித்தல்,
வருடம்தோரும் மாவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை சுவரொட்டி அச்சடித்தல்

மாவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்டது,,
+++